Posts

எதற்காக வாசிப்பு?

உலக புத்தகத் தினத்தன்று வாசிப்பு குறித்து KSR கலைக் கல்லூரியில் உரையாற்ற அழைத்திருந்தார்கள். உரையாட துவங்கியதும் எழுந்து முதலில் அரங்கினை கவனித்தேன். எப்போதும் போல் முதல் இரு வரிசை நிரப்பப்பட்டிருக்கவில்லை. இங்கு மட்டுமல்ல, வகுப்பறையில் துவங்கி எந்த இடமாக இருந்தாலும் முதல் வரிசையில் அமர அனைவரும் தயங்குகிறோம். உங்களை வந்து அமருங்கள் என்று நான் அழைக்கப் போவதில்லை. ஆனால் ஏன் இங்கு அமர தயங்குகிறிர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறேன். யாரேனும் பதில் சொல்லுங்கள். ஒரு பெண் எழுந்து "முன்வரிசைல இருக்கவங்களைப் பாத்து ஏதாவது கேள்வி கேட்டுருவாங்கன்னுதான் சார்" கைத்தட்டினேன். என்னுடன் மற்றவர்களும் தட்டினார்கள். பதில் தெரியாத கேள்விகளை எதிர்கொண்டு விடப்போகிறோம் என்று கல்லூரியிலும் பயம். இது உங்களுக்குச் சரியாகப் படுகிறதா? உங்களை அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள் என்று சொல்லமாட்டேன். அது அவரவர் ஆர்வம் சம்பந்தப்பட்டது. ஆனால் கேள்விகளைத் தவிர்க்க ஓடத் துவங்கினால் எது வரை ஓடுவீர்கள்? இறப்பு வரை உங்களது கருத்துக்களைக் கேட்கவாவது வினாக்கள் துரத்திக்கொண்டுதான் இருக்கும். அவனுக்கு, அவளுக்கு எதுவும் தெரி

பெருந்திணை - படலம் - 8

Image
  பெண்களிடம் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனையாக அவர்களது கியுரியாசிட்டியை சொல்லலாம். அதிலும் தன்னைக் குறித்த ஒன்றினை தெரிந்து கொள்ள அவர்கள் காட்டும் அதீத ஆர்வம் எப்போதும் எதிலாவது ஒன்றில் சிக்க வைப்பதுதான் வழக்கம். சைந்தவிக்கு அசோக் தான் குறித்து எந்த நிலையில் இருக்கிறான் என்று தெரிந்துக் கொள்வதில் ஆர்வமாக இருந்தது. அதே சமயம் இதனை நேரடியாக கேட்கவும் முடியாது. கேட்டாலும் கிடைக்கும் பதில் நேர்மையானதாக இருக்கப் போவதில்லை. இதற்கு என்ன செய்வது என்று மனம் குழம்பியது. எப்போதும் அல்ல. அவ்வபோது. நாளாக நாளாக அது அடங்கி விடும் என சமாதானப் படுத்திக் கொண்டாள்.  அடுத்து இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒரு தினத்தில் அவள் வெளியே சென்று திரும்பும் போது ஏகமாக மழையில் மாட்டிக் கொண்டாள். எதிர்பாராத மழை. அவள் ஸ்கூட்டியில் சென்றிருக்க, அணிந்திருந்த ஹெல்மெட் உச்சந்தலையை மட்டும்தான் காப்பாற்றியிருந்தது. ஓரளவு நனைந்த பிறகு வீட்டிற்கே சென்று விடலாம் என்று மழையிலேயே வந்து விட்டாள். அப்போது மழை விட்டு, தூறல் மட்டும்தான். வண்டியை நிறுத்தி விட்டு லிஃப்ட்டில் ஏறினால் உள்ளே அசோக். அவன் மட்டும். ஒரு கணம் தயங்கினாலும் உள்ளே ந

பெருந்திணை - படலம் - 7

Image
  அனிதா சொல்ல சொல்ல சைந்தவிக்கு என்ன பதில் சொல்வது என்றும் தெரியவில்லை. முகத்தை எப்படி வைத்துக் கொள்வது என்றும் புரியவில்லை.  நெருக்கமான தோழிகள் என்றால் முழு நெருக்கம்தான். ஒளிவு மறைவு என்று பெரிதாக எதுவும் இருக்காது. மனதில் தேக்கி வைக்காமல் சொல்லித் தீர்க்கும் நட்பு இல்லாமையே பெரும் வறுமை. இணையருடன் சின்ன சின்ன சண்டைகள் வரும் நேரங்களில் அவரை குறை சொல்லி புலம்பவும் இவள்தான், கொண்டாடி மகிழ்வதை வெட்கம் பொங்க குறும்பு மின்ன கொட்டித் தீர்க்கவும் இவள்தான். பாண்டிச்சேரியில் தங்கிய இரவு நிகழ்ந்ததைத்தான் முதலிரவை முடித்து வந்தவள் கணக்காய் விவரித்துக் கொண்டிருந்தாள் அனிதா.  தான் மேலாடையின்றி கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொண்டிருக்கையில் அசோக் கதவினைத் திறந்து பார்த்ததும், சில கணங்கள் என்ன செய்வது என புரியாமல் இவளும் உறைந்து நின்றதும், அவன் உறைந்து நிற்பதையும் மீறி அவன் ஷார்ட்ஸ் அசைய, பதறியபடி அங்கிருந்து வேகமாக அவன் கதவை மூடியபடி நகர்ந்ததும் அவள் நினைவுக்கு வந்தன. “அன்னைக்கு என்னாச்சுன்னே தெரியலை. இத்தனை வருசத்துல இவ்வளவு வெறியோட அவன் பண்ணதேயில்லை. எத்தனை பொசிஷன்ங்கற? மாத்திக்கிட்டே இருக்கா

பெருந்திணை - படலம் - 6

Image
  ஒரு பொருள் தீப்பிடித்து எரியும். காற்று கொஞ்சம் வீசினால் அணைந்து போகும். கொஞ்ச நேரத்தில் அதன் மேல் சாம்பல் படரும். மொத்தமாக அணைந்து விட்டது என்று நினைக்கையில் வேகமாக அடிக்கும் காற்று சாம்பலை விலக்கி, மீண்டும் தீப்பிடிக்க வைப்பதோடு, கொழுந்து விட்டு எரிய செய்து விடும். அப்படி ஒரு சம்பவம் அசோக் - சைந்தவி இடையே நிகழ்ந்தது. அன்றைய பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுக்கு பிறகு எல்லாம் சற்று அடங்கித்தான் போனது. தன் இணையருடனான கூடலின்போது இடைப்பட்ட நபரின் முகம் அவர்கள் இருவரையுமே யோசிக்க வைத்திருந்தது. மனம் ஒரு சிறந்த அக்கவுண்டண்ட். எப்போதும் கிடைக்கக் கூடியவற்றைக் காட்டிலும் இழக்க நேர்வதை முன் கூட்டியே எச்சரித்து விடும். என்ன எதிர்பார்க்கிறான்? சைந்தவியின் உடலை, அவளுடனான கூடலை. ஆனால் அனிதாவுடனான இந்த உறவை பணயம் வைக்கலாமா? அந்தளவு அது அவசியமா? இந்த இடத்தில் உறவு என குறிப்பிடுவது திருமண பந்தத்தை அல்ல. உடலுறவைத்தான். அனைவருக்குள்ளும் ஒரு தவறான நம்பிக்கை இருக்கும். நமக்கு அனைத்தும் தெரியும். அனைத்தையும் அனுபவித்து பார்த்து விட்டோம். இனி இதில் புதிதாக என்ன இருக்கிறது என்று. முழுக்க முழுக்க செய்முறையில

பெருந்திணை - படலம் - 5

Image
  தன் மனதினுள் சைந்தவி மீதான ஈர்ப்பு ஒரு கொடியை போல் சரசரவென வளர்ந்துக் கொண்டிருப்பதை அசோக் உணர்ந்தான். முதலில் பார்க்க தோன்றியது. அடுத்து ரசிக்க தோன்றியது. இப்போது மனதிற்குள் துகிலுரிக்க துவங்கியாகிற்று. அடுத்து எங்கே போகும்? காமம் சார்ந்த உணர்வுகளில் இருக்கும் முரண் மிகவும் சுவாரசியமான விசயம்.  பற்றி எரியும் ஆசையும் அது தணிந்ததும் வரும் குற்ற உணர்வும் இருக்கிறதே… இதில் கொடுமை என்னவென்றால் இரண்டுமே வதைக்கும். அமைதியாக அமர்ந்திருக்கும் நபரிடம் ஒருவர் வந்து அடித்து ஆயிரம் ரூபாயை வற்புறுத்தி கொடுத்து விட்டு, அவர் அந்த பக்கம் சென்றதும் இன்னொருவர் வந்து அவரும் அடிஅடியென அடித்து இரண்டாயிரமாக பிடுங்கி சென்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அசோக்கிற்கு. சைந்தவியை பார்த்து கற்பனை செய்த பொழுது வந்த ஏக்கமும் குத்தியது. அது தணிந்த பின் வந்த குற்ற உணர்வும் ஒரு மாதிரி வலியை தந்தது.  முகம் தானாக வாடியது.  அனிதா அதை கவனித்து விசாரித்தாள். காய்ச்சலோ என்னவோ என்று தொட்டுப் பார்த்தாள். அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சகஜமாக சிரிக்க முயன்றான்.  ஒரு கொண்டாட்ட நிகழ்வு எப்போதும் பெண்களை உற்சாகமூட்டும்.

பெருந்திணை - படலம் - 4

Image
  சைந்தவி கண்ணாடி எதிரே நின்று கொண்டிருந்தாள். மேலிருந்து கீழே தன்னை முழுமையாகப் பார்த்தாள். சராசரியான பெண்களை விட கொஞ்சம் கூடுதல் உயரம். அதுவே இவளை மற்ற பெண்களிடமிருந்து பிரித்து காட்டி விடும். அவ்வுயரத்திற்கேற்ற விகிதத்தில் அவயங்கள். கூடவும் இல்லை. குறையவும் இல்லை. மடிப்பில்லாத இடுப்பு. இளமைக்கு இதுதான் முதல் சான்று.  கார்த்திக் வரவில்லை என்று சொன்ன பின் தனியாக தயாரானாள். சில விசயங்களுக்கு தனிமை போதை. அதில் குறிப்பிட்டது தன்னை தயார் செய்துக் கொள்வது. இன்னொருவர் முன்பு உடையணிந்து அலங்காரம் செய்வதெல்லாம் அத்தனை ஆசுவாசமானதாக இருக்காது. அதிலும் சைந்தவிக்கு தனிமை. இப்படி நிர்வாணமாக ஓரிரு கணங்கள் தன்னை வெளிச்சத்தில் கண்டுணர்வது எப்போதாவது வாய்ப்பதுதான். அனைவரும் வரவேற்பறையில். இவள் படுக்கையறையில் தயாரானாள். தயாராகும் போதே அசோக்கின் நினைவு வந்தது. அவன் வருவான் என்று அனிதா சொன்னாள். அன்றைய தினத்திற்கு பிறகு அவன் தன்னை பார்வையால் தீண்டவில்லை என்பது நல்லதாகப் பட்டாலும் அதற்குள்ளாக முடிந்து விடும் என்பதில் அவளுக்கே நம்பிக்கை வரவில்லை. இத்தனை அழகுடன் எத்தனை பேரை கடந்து வந்திருப்பாள்? அலங்காரம் ஒ

பெருந்திணை - படலம் - 3

Image
  டைப் செய்த கமெண்டை போஸ்ட் செய்யாமலே டெலிட் செய்தான் அசோக். போனை லாக் செய்து பாக்கெட்டில் போட்டவன் மீண்டும் பத்து வினாடிகளுக்கு பிறகு எடுத்து சைந்தவி படத்தைப் பார்த்தான். முந்தைய படங்களை ஒவ்வொரு படமாக ஓட்டிப் பார்த்தான். சில படங்கள் எடுத்த தினத்தில் அவள் கூடவே இருந்திருக்கிறான். பெரும்பாலும் வெளியே சுற்றுகையில் அதை எங்கே என்று திட்டமிடுவது அனிதாவும் சைந்தவியுமாக சேர்ந்தே திட்டமிடுவார்கள். அத்தினங்களில் அவ்வபோது அசோக்கும் உடனிருப்பது உண்டு. அப்போதெல்லாம் அசோக்கிற்கு சைந்தவி மீது பெரிதாக எந்த ஈர்ப்புமில்லை. அப்போதும் அழகுதான். யார்தான் அழகில்லை? இப்படி சொல்வதை விட யாருக்குத்தான் தங்களை அழகாக காட்டிக் கொள்ள தெரியாமலிருக்கிறது என்று கேட்பது பொருத்தமாக இருக்கும். அது ஒரு கலை. உடலை வாகாக பராமரிக்க வேண்டும். அவ்வபோது அழகு நிலையங்களில் பொருத்தமாக பட்டைத் தீட்டிக் கொள்ள வேண்டும். முக்கியமாக அதை வீட்டிலும் வாழ்க்கை முறையாய் மாற்றியிருக்க வேண்டும். அடுத்து நேர்த்தியான உடைகள். அதில் தவறில்லை. எப்போதும் தங்களை அழகாக வைத்துக் கொள்பவர்கள் மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு காரணமாகிறார்கள்தானே?  அசோக்கின் மன