லஞ்சம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை

அவதி தரப்போகும் அடையாள அட்டை!

'ரயிலில், இரண்டாம் வகுப்பு பெட்டியில் (ரிசர்வ்) பயணம் செய்யும் பயணிகளும் இனி, அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்' என்ற விதியைக் கொண்டு வரப்போகிறது ரயில்வே துறை! புரோக்கர்கள் மூலமாக கள்ள மார்கெட்டில் டிக்கெட் விற்பதைத் தடுக்கவும்... தவறான நபர்கள் பயன் அடைவதைத் தடுக்கவும் இது பயன்படும் என்பது ரயில்வேயின் வாதம்.

Photo: அவதி தரப்போகும் அடையாள அட்டை! 

'ரயிலில், இரண்டாம் வகுப்பு பெட்டியில் (ரிசர்வ்) பயணம் செய்யும் பயணிகளும் இனி, அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்' என்ற விதியைக் கொண்டு வரப்போகிறது ரயில்வே துறை! புரோக்கர்கள் மூலமாக கள்ள மார்கெட்டில் டிக்கெட் விற்பதைத் தடுக்கவும்... தவறான நபர்கள் பயன் அடைவதைத் தடுக்கவும் இது பயன்படும் என்பது ரயில்வேயின் வாதம்.

ஆனால், இந்த விதியை நீட்டும்முன்பாக... நாட்டில் உள்ள எல்லா குடிமக்களுக்கும் அடையாள அட்டை கிடைத்துவிட்டதா என்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். 'வாக்காளர் அடையாள அட்டையை தமிழகத்தில் 100 சதவிகிதம் கொடுத்துவிட்டோம்' என்று சில மாதங்களுக்கு முன் மாநில தேர்தல் ஆணையம் கூறியது. உடனே இதற்கு மறுப்பு தெரிவித்த பழ.நெடுமாறன், 'தாம்பரம் பகுதியில் வசிக்கும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இதுவரை வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கவில்லை' என்று கூறினார். இதையடுத்து, இந்த வரிசையில் பலபேர் இருக்கிறோம் என்று ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக பலரும் பதிவு செய்தனர்.
அடுத்து 'ஆதார் அட்டை' என்ற ஒன்றை கொண்டு வந்தார்கள். ஆனால், இதைக் கொடுப்பதில் மத்தியில் உள்ள அரசியல்வாதிகளிடையே ஏற்பட்ட மோதலில்... இப்படியொரு அட்டை வருமா... வராதா என்பதே குழப்பமாக இருக்கிறது.

இப்படித்தான் ஒவ்வொரு அடையாள அட்டை விஷயத்திலும் ஆயிரத்தெட்ட ஓட்டைகள். அதையெல்லாம் அடைக்காமல் விதியை மட்டும் நீட்டினால்... வேலை தேடி வெளியூர்... வெளிமாநிலம் எனச் செல்லும் கிராமப்புற மக்கள், இதன் காரணமாக... ரயில்வே ஊழியர்களிடம் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதைத் தவிர, வேறு எதையும் இது சாதிக்காது!

ஆனால், இந்த விதியை நீட்டும்முன்பாக... நாட்டில் உள்ள எல்லா குடிமக்களுக்கும் அடையாள அட்டை கிடைத்துவிட்டதா என்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். 'வாக்காளர் அடையாள அட்டையை தமிழகத்தில் 100 சதவிகிதம் கொடுத்துவிட்டோம்' என்று சில மாதங்களுக்கு முன் மாநில தேர்தல் ஆணையம் கூறியது. உடனே இதற்கு மறுப்பு தெரிவித்த பழ.நெடுமாறன், 'தாம்பரம் பகுதியில் வசிக்கும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இதுவரை வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கவில்லை' என்று கூறினார். இதையடுத்து, இந்த வரிசையில் பலபேர் இருக்கிறோம் என்று ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக பலரும் பதிவு செய்தனர்.

அடுத்து 'ஆதார் அட்டை' என்ற ஒன்றை கொண்டு வந்தார்கள். ஆனால், இதைக் கொடுப்பதில் மத்தியில் உள்ள அரசியல்வாதிகளிடையே ஏற்பட்ட மோதலில்... இப்படியொரு அட்டை வருமா... வராதா என்பதே குழப்பமாக இருக்கிறது.

இப்படித்தான் ஒவ்வொரு அடையாள அட்டை விஷயத்திலும் ஆயிரத்தெட்டு ஓட்டைகள். அதையெல்லாம் அடைக்காமல் விதியை மட்டும் நீட்டினால்... வேலை தேடி வெளியூர்... வெளிமாநிலம் எனச் செல்லும் கிராமப்புற மக்கள், இதன் காரணமாக... ரயில்வே ஊழியர்களிடம் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதைத் தவிர, வேறு எதையும் இது சாதிக்காது!

நன்றி: விகடன்

Comments

  1. சிறப்பான பகிர்வு! உண்மையை சொல்லியுள்ளீர்கள்!

    இன்று என் தளத்தில்
    திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
    குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

கலாய்ச்சுட்டாராமாம்...