ஏழை இந்துக்களுக்கான போராட்டம்

அன்பர்களுக்கு வணக்கம்,சிறுபான்மை கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதுபோல் ஏழை இந்து மாணவ- மாணவிகளுக்கும் கல்வி உதவி தொகை வழங்க கோரி பாரதீய ஜனதா பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

Photo: சிறுபான்மை கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதுபோல் ஏழை இந்து மாணவ- மாணவிகளுக்கும் கல்வி உதவி தொகை வழங்க கோரி பாரதீய ஜனதா பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்கள் தொடர் உண்ணா விரதம் இருக்கப்போவதாக பாரதீய ஜனதா தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் அறிவித்தார். சென்னையில் 3 நாள் உண்ணாவிரதத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை.

இதையடுத்து மறைமலை நகரில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு மறைமலை நகரில் பொன்.ராதாகிருஷ்ணன் உண்ணாவிரதம் தொடங்கினார்.

அகில இந்திய செயலாளர் முரளிதர்ராவ், இல.கணேசன் ஆகியோர் வாழ்த்தினார்கள். மாநில அமைப்பு செயலாளர் மோகன்ராஜுலு, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சரவணபெருமாள், வானதி சீனிவாசன், சுரேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேதசுப்பிரமணியன், மாவட்ட தலைவர் கே.டி. ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதம் தொடங்கிய பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-

நாடு விடுதலையடைந்து 66 ஆண்டுகளில் சாதி, மதம், மொழி அடிப்படையில் மக்களை பிரித்து அரசியல் ஆதாயம் தேடி வருகிறது. இதை மக்கள் கவனிக்க தவறிவிட்டனர். இதனால் காங்கிரஸ் செய்யும் தவறு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத அடிப்படையில் கல்வி வழங்க கூடாது என்று அம்பேத்கார் அரசியல் சட்டத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் அரசு ஆட்சியை தக்க வைக்க சிறுபான்மை ஓட்டு வங்கி தேவை என்பதால் சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்துக்கள் ஓட்டுப்பகுதி, மொழி, சாதி அடிப்படையில் பிரிந்துவிடும் என்பதால் கண்டு கொள்வதில்லை. 2005-ல் சச்சார் கமிட்டியை அமைத்து அதன் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்கள் பராமரிப்பு, உணவு சலுகைகளுக்காக உதவி தொகை வழங்கி வருகிறது.

பா.ஜனதா உதவி தெகை வழங்குவதை குறை சொல்வதில்லை. ஓட்டு வங்கிக்காக குறிப்பிட்ட மதத்தவர்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்குவது மாணவர்கள் மத்தியில் பிரிவினைகளையும், மத மோதல்களையும் உருவாக் கும். அனைத்து மாணவர் களும் மதிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்கள் தொடர் உண்ணா விரதம் இருக்கப்போவதாக பாரதீய ஜனதா தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் அறிவித்தார். சென்னையில் 3 நாள் உண்ணாவிரதத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை.

இதையடுத்து மறைமலை நகரில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு மறைமலை நகரில் பொன்.ராதாகிருஷ்ணன் உண்ணாவிரதம் தொடங்கினார்.

அகில இந்திய செயலாளர் முரளிதர்ராவ், இல.கணேசன் ஆகியோர் வாழ்த்தினார்கள். மாநில அமைப்பு செயலாளர் மோகன்ராஜுலு, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சரவணபெருமாள், வானதி சீனிவாசன், சுரேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேதசுப்பிரமணியன், மாவட்ட தலைவர் கே.டி. ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதம் தொடங்கிய பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-

நாடு விடுதலையடைந்து 66 ஆண்டுகளில் சாதி, மதம், மொழி அடிப்படையில் மக்களை பிரித்து அரசியல் ஆதாயம் தேடி வருகிறது. இதை மக்கள் கவனிக்க தவறிவிட்டனர். இதனால் காங்கிரஸ் செய்யும் தவறு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத அடிப்படையில் கல்வி வழங்க கூடாது என்று அம்பேத்கார் அரசியல் சட்டத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் அரசு ஆட்சியை தக்க வைக்க சிறுபான்மை ஓட்டு வங்கி தேவை என்பதால் சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்துக்கள் ஓட்டுப்பகுதி, மொழி, சாதி அடிப்படையில் பிரிந்துவிடும் என்பதால் கண்டு கொள்வதில்லை. 2005-ல் சச்சார் கமிட்டியை அமைத்து அதன் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்கள் பராமரிப்பு, உணவு சலுகைகளுக்காக உதவி தொகை வழங்கி வருகிறது.

பா.ஜனதா உதவி தெகை வழங்குவதை குறை சொல்வதில்லை. ஓட்டு வங்கிக்காக குறிப்பிட்ட மதத்தவர்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்குவது மாணவர்கள் மத்தியில் பிரிவினைகளையும், மத மோதல்களையும் உருவாக் கும். அனைத்து மாணவர் களும் மதிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது.

இவ்வாறு அவர் கூறினார்.
 
நன்றி: தமிழ் நாடு அரசியல்

Comments

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

கலாய்ச்சுட்டாராமாம்...