Posts

Showing posts from September, 2012

22 FEMALE KOTTAYAM திரை விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், என்னவோ எப்போது பார்த்தாலும் வேறு மொழிப் படங்களை பற்றி எழுதுவதற்குதான் நேரம் அமைகிறது, ஏற்கனவே வாங்கி வைத்து ரொம்ப நாள் பார்க்காமல் இருந்து பார்த்த படம், எனக்கு அறிமுகப்படுத்தியது " வல்லத்தான் ". படத்தின் பெயர் 22 FEMALE KOTTAYAM.   படத்தின் ஆரம்பத்திலேயே தெரிந்து விடுகிறது, ஏதோ ஒரு த்ரில்லர் வகை என எதிர்பார்க்கும் பொழுதே கதை நாயகியின் அறிமுகப்பாடலில் மனம் லேசாகிறது, கொச்சினில் ஒரு பெரிய மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் நாயகிக்கு வெளி நாட்டில் சென்று வேலை பார்க்கும் ஆசை உண்டு. அதற்காக வீசா அப்ளை செய்து வாங்கி குடுக்கும் நிறுவனத்தில் நாயகனை சந்திக்கிறாள். கதையோடு நர்ஸ்களின் வாழ்க்கை பற்றியும் சொல்கிறார்கள். வீசா கிடைத்தற்காக ஹீரோவுக்கு ட்ரிட் தரும் பொழுது நிறைய குடித்த ஹீரோயின் தெளிவாக இருப்பதும் போதையேறிய ஹீரோவினை வீட்டில் கொண்டு விடுவதும் நல்ல ரசனைக்குரிய இடங்கள். அதன் பின் கொஞ்சமாய் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கிறது, காதலாகிறது. ஹீரோ ஏதோ சொல்ல வரும் நேரத்தில் டக்கென்று "I AM NOT A VIRGIN" என ஹீரோயின் ப

FERRARI KI SAWAARI திரை விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், அது என்னவோ தெரியவில்லை, இந்திய சினிமாக்களில் ஒவ்வொரு மாநிலங்களிலும் விதவிதமாய் சினிமாக்கள் வருகின்றன, எனக்கென்னவோ தமிழில் பல்வேறு விதமான படங்கள் வருவது குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது. மற்ற மொழிகளில் 10 விதமான படங்கள் வந்தால் தமிழில் 3 விதங்கள் தான், கருத்துள்ள படங்கள் எடுத்தால் உட்கார்ந்து பார்க்க முடியாத அளவுதான் திரைக்கதை அமைக்கிறார்கள்.   சமிபத்தில் ஹிந்தியில் வெளி வந்த படம் ஒன்றினை பார்த்தேன், படத்தின் பெயர் FERRARI KI SAWAARI, பலர் இப்படத்தினை பார்த்திருப்பீர்கள்.  3 இடியட்ஸ் படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பியிருந்த ஷர்மான் ஜோஷிதான் கதை நாயகன்.  கதைப்படி மகன், தந்தை, தாத்தா என 3 ஆண்கள் மட்டும் வாழும் வீடு, மகனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம், திறமையாக விளையாடுகிறார், அதை முழுமையாய் ஊக்குவிக்கும் அப்பாவாக நாயகன், தெரியாமல் சிக்னலை கடந்ததற்கு போலிஸ் ஐ தேடிப்போய் ஃபைன் கட்டி மகனுக்கு நேர்மையை கற்று தருபவர், எப்போது பார்த்தாலும் எரிந்து விழும் தாத்தா.   நேர்மையாய் வாழ்பவர்களிடம் வருமானம் குறைவாகத்தான் இருக்கும், கிரிக்கெ

கொசுவை விரட்டும் பாசி

Image
அன்பர்களுக்கு வணக்கம், ஒட்டு மொத்த மனித இனத்திற்கே இப்போது பெரும் சவாலாய் இருப்பது கொசு தான், ரொம்ப பாதிக்கப்பட்டுதான் ராஜமௌலி "நான் ஈ" படம் எடுத்துருப்பார்னு நினைக்கறேன். அப்படிப்பட்ட கொசுவ ஒழிக்க விதவிதமான ஐடியா எல்லாரும் குடுக்கறாங்க.  நாமளும் ALL OUT, GOOD NIGHT னு என்னென்னமோ பயன்படுத்தி பார்த்துட்டோம், நம்ம ரத்தத்தை குடிச்சுட்டு கோசு போய் ரெஸ்ட் எடுக்கறதே அந்த காயில் மேலதான். அதுலயும் இப்ப அடிக்கடி மின்தடை ஏற்படறதால கொசுவர்த்திதான் கொளுத்திட்டு இருக்கோம், முகப்புத்தகத்துல மேய்ஞ்சுட்டு இருந்தப்ப கீழ இருக்கற விஷயத்தை படிச்சேன், சரி பகிர்ந்துகிட்டா மக்களுக்கு உபயோகமா இருக்குமேனு பகிர்ந்துக்கறேன். கொசுவை விரட்டும் பாசி...   ஒரேக் கல்லில் எக்கசக்க மாங்காய்..! கொசுக் கடியில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான அளவுக்கு செலவு செய்கிறோம். அசோலா என்ற பாசியை வளர்த்தால், அந்த வீட்டுப் பக்கம் கொசுக்கள் எட்டிப்பார்க்கா து. இந்த பாசியை வடை, போண்டா, பஜ்ஜி... என்று பலகாரம் செய்தும் சாப்பிடலாம். அற்புதமான ருசியில் இருக்கும். புரதச் சத்துக் கொண்ட இந

நோயின்றி வாழ மீன் சாப்பிடுங்க...

Image
அறிவை அதிகரிக்கும் மீன் உணவுகள், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்!.... நீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஸ்வீடன்ஆராய்ச்சியாளர்கள். சுமார் 5 ஆயிரம் பேரை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தார்கள். ஆய்வு முடிவில், வாரத்திற்கு ஒன்றும் மேற்பட்ட முறை மீன் உணவு உட்கொண்டவர்கள், அதைவிட குறைவாக மீன் உட்கொண்டவர்கள் மற்றும் மீனே சாப்பிடாதவர்களைக் காட்டிலும் அதிக அறிவுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்ப ட்டது. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, `15 வயதுக்கு மேல் மீன் உணவு அதிகம் உட்கொள்வது அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட முறை மீன் உணவை எடுத்துக்கொள்பவர்கள்தான் இந்த பலனை பெற முடியும். அதனால், மீன் உணவுகளை தவிர்க்காமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது' என்றனர். தாய்மைக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் அறிவில் படு சுட்டியாக இருப்பார்களாம். அம

A Cinderella Story திரைவிமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், என் மாணவர்களுக்கு தேர்வு நெருங்குவதால் முன் போலதிகமாய் எழுத இயலவில்லை, தினமும் இறக்கம் செய்யும் படங்களும் என் கணிணியினை நிரப்பிக் கொண்டே வருகிறது, ஒரு படத்தினை பார்த்ததும் அதன் விமர்சனம் எழுதிய பின்புதான் அதனை அழிப்பது வழக்கம், எப்போதோ எடுத்து வைத்து சமிபத்தில் பார்த்த படம் "A CINDERELLA STORY".   இந்த சின்ட்ரெல்லா பெயரினை கேள்விப் படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், அது போலத்தான் அந்த கதையும், சிறுவயதில் பெற்றோரினை இழந்து சித்திக் கொடுமையால் வாடும் கதா நாயகி தேவதையின் வரத்தால் இரவு அரண்மனையில் நடக்கும் விருந்திற்கு முகத்தினை காட்டாமல் சென்று இளவரசனை கவர்ந்து பின் காலணியினை வைத்து இருவரும் சேரும் கதை, சிறுவயதில் பலருக்கு இது BED TIME STORY ஆக இருந்திருக்கும். எனக்கு இல்லைங்க. படத்துக்கு வருவோம், இப்ப மேல படிச்ச அதே கதைய இப்ப இருக்க கலாச்சாரத்துக்கு ஏத்த மாதிரி எடுத்தா எப்படி இருக்கும்? அந்த ஒரு கேள்விக்காகத்தான் நானும் படம் பார்த்தேன். கதைப்படி அம்மா இல்லாத ஒரு பெண் குழந்தை அவங்க அப்பா கூட சந்தோஷமா இருக்கறப்ப சித்தியா 2 குழந்தையோட ஒரு மே

ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!

Image
நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார். ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார். மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார். சரி நாள

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம் எப்படி ?

Image
அன்பர்களுக்கு வணக்கம்.நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்டிரால்ல நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு கொலஸ்ட்ரால்: கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது இந்த உப்புகள் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. உடலானது தேவையான அளவு கொலஸ்டிராலினை உற்பத்தி செய்கிறது. எனவே வேறு கொலஸ்டிரால் உடைய உணவை உண்ணாமல் இருந்தால் நல்லது. ஆனால் உணவில், கொலஸ்டிராலை முழுமையாக தவிர்ப்பதென்பது கடினமானமாகும். ஏனெனில் பல உணவுகள் இத