Posts

Showing posts from November, 2012

கண்களை பார்த்துகொள்ளுங்கள்

Image
அன்பர்களுக்கு வணக்கம், அதிக நேரம் இனையத்தில் இருக்கும் நமக்கு கண்கள் வெகுவாய் பாதிக்க படுகின்றன. கண்களை பாதுகாக்க:-   1. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது. 2. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். 3. கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும். 4. மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும். 5. சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். 6. பொதுவாக சூரி

வியக்க வைக்கும் தகவல்கள்

Image
நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது. சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது. பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும். கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம். மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள். மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார். பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும். உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான். ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம். பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலா

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

Image
(இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.) எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.     எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்: பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம். இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும். நிறைய கோயி

JUST GO WITH IT - REIVIEW

Image
அன்பர்களுக்கு வணக்கம், தீராத மின்வெட்டின் காரணமாக ஒரு படத்தை மூன்றாக பிரித்து மூன்று நாட்களில் பார்த்து முடிக்க வேண்டியாதாய் இருக்கிறது, நேற்று தீபாவளியினை முன்னிட்டு முழு நாளும் மின்சாரம் இருந்ததால் இந்த படத்தை பார்க்க முடிந்தது. படத்தின் பெயர் "JUST GO WITH IT" தமிழ்ல அது போக்குலய போலாம்னு கூட சொல்லலாம். நமக்கு எப்பவுமே பெருசா ட்விஸ்ட் இல்லைனாலும் பாஸிட்டிவ் க்ளைமாக்ஸ் இருக்க இந்த மாதிரி ரொமாண்டிக் காமெடி வகை படம் தான் ஆல் டைம் ஃபேவரட். சரி வாங்க படத்துக்கு போவோம். எல்லா நாட்டுலயும் எப்படி பொன்னுங்க ஒரே மாதிரி இருக்காங்களோ, அசிங்கமா இருந்தாலும் பராவாயில்லைனு ஒருத்தனை (ஹீரோ) கல்யாணம் பண்ணிகிட்டு அவனை அவன் குடும்பத்துலருந்து பிரிச்சு கூட்டி வந்து, அவன் டாக்டராகி சம்பாரிக்கற எல்லாத்தையும் ஆட்டய போட்டு பாய் ஃப்ரெண்ட்ஸ் கூட ஆட்டம் போட திட்டம் போடற ஒரு பொண்ணுகிட்ட இருந்து எஸ்கேப் ஆகி ஹீரோ பார்ல கல்யாண மோதிரத்தோட சரக்கடிக்கறப்ப, ஒரு பொண்ணுகிட்ட எதெச்சையா கல்யாணம் ஆனவன் மாதிரி சீன் போட செட் ஆகிருது, அதுலருந்து வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அந்த மோதிரத்தை வச்சுதான் ஒவ்வொர

கோதாவரி - ஃபீல்குட் காதல் படம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், என்னதான் தமிழ் சினிமாவில் சமிப காலங்களில் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஃபீல் குட் படங்களின் எண்ணிக்கை சுத்தமாக குறைந்து விட்டது, வருபவர்கள் அனைவரும் சமுதாயத்தை திருத்துவதற்கும், நட்பிற்குமே படமெடுத்து தள்ளுகிறார்கள். இன்று நாம் பார்க்க போவது தெலுங்கில் வந்த ஒரு ஃபேல் குட் படம் "கோதாவரி"   தமிழில் 'இனிது இனிது' என்று ஒரு படம் வந்தது, அனைவரும் பார்த்திருப்பீர்கள், அதன் ஒரிஜினல் பதிப்பான "ஹேப்பி டேஸ்" படத்தினை இயக்கிய சேகர் கம்முலாவின் படம் தான் இந்த கோதாவரி. ரொம்ப நாளாக இனையத்தில் இருந்து எடுத்து வைத்து இருந்த படம். சரி கதைக்கு வருவோம். நாயகன் ராம் அமெரிக்காவில் படித்துவிட்டு மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று ஆளுங்கட்சிக்கு சென்று தன்னை சேர்த்து கொள்ளுமாறு கேட்டு அசிங்கபட்டு வரும் இயல்புக்கு புறம்பான குணம் படைத்தவன், இது போன்ற குணங்களால் நேசிக்கும் அத்தை மகள் ராஜியினை(நீது சந்த்ரா) மணக்க முடியாமால் IPS மாப்பிள்ளைக்கு விட்டு குடுக்கிறார். நாயகி சீதா(கமாலினி முகர்ஜி), அப்பா செல்லாமாக வளர்ந்து சொந்தமாக ஃபேஸன்

பவர்கட் பிரச்னையா...இன்றே சோலாருக்கு மாறுங்க !

Image
'பவர் கட் பிரச்னை, விரைவில் தீர்ந்துவிடும்' என்கிற நம் நம்பிக்கைதான், தீர்ந்துகொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்று ஆரம்பித்தது... இன்று 12 மணி நேரம்... 16 மணி நேரம்... 18 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே போகிறது. 'இனி, அரசாங்கத்தை நம்பி பலனில்லை' என்று உணர்ந்த மக்கள், 'இன்வர்ட்டர்'களை வாங்கினார்கள். ஆனால் , அந்த இன்வர்ட்டரில் சேமிக்கும் அளவுக்கான மின்சார சப்ளைகூட இல்லாத நிலையில், அதுவும் பல வீடுகளில் பயனற்றுக் கிடக்கிறது.   மாற்று வழியாக, சூரிய ஒளி மூலம் அவரவர் வீடுகளுக்கான மின்சாரத்தை அவரவர்களே தயாரித்துக் கொள்ளும் சோலார் முறையை அரசாங்கம் பரிந்துரைத்து, மானியமும் வழங்குவதாக அறிவித்திருப்பது உருப்படியான யோசனை. இதையடுத்து, அங்கொன்று... இங்கொன்று என்று சில வீட்டு மாடிகளில் மின்னுகின்றன சோலார் தகடுகள். 'பவர் இருந்தாலும் இல்லைனாலும் எங்க வீட்டுல பிரச்னை இல்லைங்க...’ என்று அதை உபயோகிப்பவர்கள் சர்டிஃபிகேட் தருகிறார்கள். மக்கள் மத்தியில் சோலார் பிளான்ட் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை பற்றிய விழிப்பு உணர்வு பெருக ஆரம்பித்திருக