சாரல் காலம் 1

"இப்ப தம்மடிக்கலாமா? வேணாமா?"

யோசித்துக்கொண்டே ஹரி கிருஸ்ணன் பெருந்து நிலையத்தில் நடந்து கொண்டிருந்தான்.

"பேசாம பசங்க கூடவே போயிருக்கலாம், வெட்டி சீன் போட்டுருக்க கூடாது, நான் பஸ்ல வர்ரேன்னு சொன்னா எவனாவது கட்டாய படுத்துவான்னு பார்த்தா ஆமாமா இடம் இல்லைனு கழட்டி விட்டுட்டு போய்ட்டானுங்களே"

"முதல்ல பஸ் எத்தனை மணிக்குனு கிளம்புதுனு பார்த்துட்டு தம்மடிக்கலாம்"

பஸ்ஸிற்கு வெளியில் நின்று கொண்டிருந்த கண்டக்டரிடம் 
"அண்ணே, எப்ப எடுப்பிங்க?"
"இன்னும் கால் அவர் இருக்குப்பா"
"சரின்னா, டீ சாப்பிட்டு வந்துடறேன்"


கொஞ்சம் தூரம் நடந்துருப்பான். அவன் கேட்ட அதே கேள்வி, பெண் குரலில், 
 "அண்ணே, எப்ப எடுப்பிங்க?"
மனதில் உற்சாகம் பொங்க திரும்பி பார்த்தான். அதற்குள் கேட்ட பெண் பஸ்ஸிற்குள் சென்றிருந்தாள், பின் பக்கமாய் அவசரமாய் ஏறிப் பார்த்தான்.

"இவளா?"
"அய்யோ இவ பேர் என்ன? மறந்துருச்சே, கிண்டல் பன்னி 2 மாசமாச்சு"

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQd_H6DkVIgHz2J_-uV6GUzWRsaoiASd9aOiQhySOVxzjTJN4-7HQ

ஹரி அடுத்து தம்மை பற்றியெல்லாம் நினைக்கவே இல்லை, மெதுவாய் பூனை நடை நடந்து முன்னே சென்று அமர்ந்தான்.மனதிற்குள்

"ஆத்தா மாரியாத்தா, உனக்கே தெரியும், நான் முதல்ல இவளை பார்க்கும் போது என்ன நினைச்சேன்னு உனக்கே தெரியும், சந்தர்ப்பம் எல்லாத்தையும் கெடுத்துருச்சு, ஏதோ திரும்ப வாய்ப்பு வருது, எல்லாம் நல்லபடியா அமைஞ்சா உனக்கு கும்பாபிஷேகம் பன்றம்மா"

யார் இந்த ஹரி? யார் இந்த பெண்? இருவரும் எங்கு செல்கிறார்கள்? நடுவில் என்ன பிரச்சனை? 

எடுறா கொசுவர்த்திய, சுத்துறா

ஹரி - பொறியியல் கல்லூரி 2ம் ஆண்டு மாணவன். அடிக்கடி ஒரு சந்தேகம் வரும்.

"காதலிக்கிறது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா?"
"காலேஜ் முடிக்கறதுக்குள்ளே கண்டு பிடிச்சுடனும்"
"ஆண்டவா, என் சந்தேகத்தை தீர்க்க ஒரு நல்ல புத்திசாலியான பொன்னா முக்கியமா அழகான இல்லை கொஞ்சம் சுமாரா இருந்தாலும் பரவாயில்லை, அனுப்பி வைப்பா"

வந்தாங்க நிறைய பேர், பழகனாங்க, ஹரிக்கும் அவன் நண்பர்களுக்கும் இந்த கலாச்சாரம் ஒத்து வரலை, கேர்ள் ஃப்ரெண்ட்னா ஒரு வரைமுறை இல்லையா? கட் அடிச்சா திட்டறாங்க, ஃபெயில் ஆனா திட்டறாங்க, ஒரு வாத்தியார்கிட்ட கூட சண்டை போடமுடியறதில்லை, எல்லாத்துக்கும் மேல இங்கிலிஸ் கத்துகிட்டே ஆகனும்னு சொல்றாங்க. 

நெம்ப கஸ்டம் அம்மணினு பழையபடி ஹரி குருப் வெறுமனே சைட் அடிச்சுகிட்டும் கற்பனைல காதலிச்சுகிட்டும் இருந்தாங்க, 2வது வருசம் வந்தப்புறம் அதிகம் பொன்னுங்களை கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க, ஃப்ரெண்ட் ஆ பழகனாலும்  பொன்னுங்கனா ஒரு இளக்காரம், அதுக்கு காரணம் யாருக்கும் லவ் செட் ஆகலைனு கடுப்புதான்.

காலேஜ்ல ANNUAL DAY, வழக்கம்போல கொண்டாடலாம்னு வந்துட்டு இருந்த ஹரி கண்ல அழகா, 2 கையிலயும் புக் அ குறுக்க வச்சுகிட்டு தாண்டி போன பொன்னு ரொம்ப அழகா தெரிஞ்சா, சும்மாவே பொன்னுங்கனா அழகுனு சொல்றவன் கண்ல யாருடா அழகான பொன்னுங்களை காட்டறது?

அந்த பொன்னை பார்க்கற மாதிரி உட்கார்ந்து நடக்கற நிகழ்ச்சிய கண்டுக்காம சை அடிச்சுட்டு இருந்தான், திடிர்னு பதட்டம், ஹரி சைட் அடிச்ச பொன்னு பின்னாடி இருந்த பையன் சட்டைய பிடிச்சு பக்கத்துல நின்னுட்டு இருந்த மேடம்கிட்ட ஏதோ கோபமா சொல்லிகிட்டு இருந்தாள்.

என்னடானு விசாரிச்சா அந்த பையன் பின்னாடி உட்கார்ந்து காலை வச்சு ஏதோ பன்னதா கம்ப்ளைன்ட், ஆனா அவன் நல்ல பையன்தான், தெரியாம பட்டுருக்கும். ஹரிக்கு தெரிஞ்சு போச்சு, இது நமக்கு செட் ஆகாதுனு, அதெப்படி ஒரு ஜீனியர் பொன்னு தைரியமா முதல் வருசத்துலயே சீனியரை கம்ப்ளைன்ட் பன்னலாம்?

அடுத்த 2 மாசம் அந்த பொன்னை எங்க பார்த்தாலும் கேலி.

"ஜில் ஜங் ஜக்"

"அக்கா ஹாஸ்டல்ல தண்ணி வரலை, யார்கிட்ட கம்ப்ளைன்ட் பன்னனும்?"

"ஒரு தென்றல் புயலாகி வருதே"

என்னென்னலாம் தோணுதோ பேசி, பாடி கிண்டல் பன்னாங்க, அப்படியே சைட்ல சைட் அடிச்சது ஹரி மட்டும்தான். அந்த பொன்னு இவனுங்களை கண்டுக்கவே இல்லை, கொஞ்ச நாள்ள போரடிச்சு விட்டுட்டாங்க. ஹரி மட்டும் அங்கங்க பார்க்கறப்ப நிறுத்தி நிதானமா யாருக்கும் தெரியாம முறைச்ச்சுகிட்டே சைட் அடிப்பான்.

காலேஜ்ல படிக்கற முக்கால்வாசி பேருக்கு ஃப்ரெண்ட்னு ஒரு அராத்து இருக்கு, அவ பேர் வனிதா, அவங்கக்கா கல்யாணம், தஞ்சாவூர்ல, அங்க போகத்தான் பஸ் ஏற வந்தான், பொன்னை வேற பார்த்துட்டான். பஸ் டிக்கெட் வாங்குனதும் 8 தடவையாவது கண்ணை மூடி ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் வாய்ப்பு குடுத்து டூயட் பாடுவான். அவனை டிஸ்டர்ப் பன்னாதிங்க, சாபம் விடுவான்.

அவனுக்கு என்னமோ ஒரு உள்ளுணர்வு, 
"இத்தனை நடந்தது எப்படியோ? இந்த நொடியில இருந்து இவளை நான் மனசார காதலிக்கிறேன்."

"என்ன காரணம்?"

"பூமி ஏன் உருண்டையா இருக்கு?"

"அது?????"

"போங்கடா, காதலிக்கறேன்னா விடுங்கடா, காரணம் சொன்னா என்னா காதலிக்க லோனா தரப்போறிங்க?"

----------------------------------------------------------------------------------------தொடரும்-------

பின் குறிப்பு:

கதையின் கன்னன் என்றொரு நபர் வருவார், அதுவரை கொஞ்சம் இழுக்கும், முன்பாகவே சொல்லி விடுகிறேன், மொத்தம் கதையில் 4 காதல் ஜோடிகள் உண்டு, நாலுமே வித்தியாசமானது, அடுத்த பகுதியில் சந்திப்போம். பாராட்டரதுனா வேணும்னா இப்பவே பாராட்டுங்க, திட்டறதுக்கு அவசர படாதிங்க, கன்னன் வந்தப்புறம் பேசி தீர்த்துப்போம்.

Comments

  1. //ஹரி - பொறியியல் கல்லூரி 2ம் ஆண்டு மாணவன். அடிக்கடி ஒரு சந்தேகம் வரும்.//
    சந்தேகம் படிப்பபத்தி இருக்குமோன்னு அடுத்த வரி வரி படிக்கரதுக்குள்ள தப்பா நினைச்சிட்டேன்கதிர்
    கதை சுவாரசியமாத்தான் இருக்கு. நடத்துங்க

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி கருத்துக்கு...
      படிப்ப பத்தியா?
      எப்படியும் எனக்கு பாடம் சொல்லி குடுத்த தெய்வங்கள் இதை படிப்பாங்க...
      அவங்க சிரிச்சுகிட்டே சொல்லுவாங்க, பாருங்க...

      Delete

Post a Comment

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

கலாய்ச்சுட்டாராமாம்...

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்