Posts

Showing posts from March, 2013

சாரல் காலம் 2

Image
சாரல் காலம் #0 / #1 / #2 / #3 / #4 ======================================================== கனவு கண்டதையெல்லாம் காதலியிடம் மட்டும் தான் கூறுப் போவதாய் ஹரி இருக்கையில் அது என்ன கருமமா இருந்தா நமக்கென்ன? அடுத்து என்ன நடக்க போகுதுனு பார்ப்போம், ஆனா ஒன்னு தெரிஞ்சுக்கங்க, ஹரி ஏதோ முதல் முதலா ஒரு பொன்னை பார்த்து காதல் வயப்பட்டு கற்பனைக்கு போய்ட்டதா நினைக்க வேண்டாம். ஏதாவது கொலை கேஸ்ல தப்பா அவனை பிடிச்சு போய் போலிஸ் ஸ்டேசன்ல சட்டைய கழட்டி உட்கார வச்சிங்கன்னா கூட அங்க இருக்க ஏதாவது ஒரு லேடிய ஒரே ஒரு தடவை பார்த்துட்டு கண்ணை மூடிட்டு கனவுக்கு போயிருவான். "ஹலோ" "ஹலோ" "எனக்கு இளையராஜா பாட்டு பிடிக்கும்" "எனக்கும் தான்" "எனக்கு கௌதம் மேனன் படம்னா ரொம்ப பிடிக்கும்" "எனக்கும் தான்" "எனக்கு உங்களை பிடிச்சுருக்கு" "எனக்கும் தான்" தம்தன தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும்.... பாட்டு முடியறப்ப இவன் எந்த பொன்னை நினைச்சு கனவு கண்டானோ அது ஃப்ரேம்லயே இருக்காது, வேற யாரு

சாரல் காலம் 1

Image
"இப்ப தம்மடிக்கலாமா? வேணாமா?" யோசித்துக்கொண்டே ஹரி கிருஸ்ணன் பெருந்து நிலையத்தில் நடந்து கொண்டிருந்தான். "பேசாம பசங்க கூடவே போயிருக்கலாம், வெட்டி சீன் போட்டுருக்க கூடாது, நான் பஸ்ல வர்ரேன்னு சொன்னா எவனாவது கட்டாய படுத்துவான்னு பார்த்தா ஆமாமா இடம் இல்லைனு கழட்டி விட்டுட்டு போய்ட்டானுங்களே" "முதல்ல பஸ் எத்தனை மணிக்குனு கிளம்புதுனு பார்த்துட்டு தம்மடிக்கலாம்" பஸ்ஸிற்கு வெளியில் நின்று கொண்டிருந்த கண்டக்டரிடம்  "அண்ணே, எப்ப எடுப்பிங்க?" "இன்னும் கால் அவர் இருக்குப்பா" "சரின்னா, டீ சாப்பிட்டு வந்துடறேன்" கொஞ்சம் தூரம் நடந்துருப்பான். அவன் கேட்ட அதே கேள்வி, பெண் குரலில்,   "அண்ணே, எப்ப எடுப்பிங்க?" மனதில் உற்சாகம் பொங்க திரும்பி பார்த்தான். அதற்குள் கேட்ட பெண் பஸ்ஸிற்குள் சென்றிருந்தாள், பின் பக்கமாய் அவசரமாய் ஏறிப் பார்த்தான். "இவளா?" "அய்யோ இவ பேர் என்ன? மறந்துருச்சே, கிண்டல் பன்னி 2 மாசமாச்சு" ஹரி அடுத்து தம்மை பற்றியெல்லாம் நினைக்கவே இல்லை, மெதுவாய் பூன

சாரல் காலம் - முன்னுரை

Image
அன்பர்களுக்கு வணக்கம், ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களுக்காக வலைச்சரத்தை துவங்கியிருப்பார்கள், எனக்கும் ஒரு காரணம் உண்டு, நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் அனைவரும் நோட்ஸ் எடுக்கும் பொழுது தனியாக நோட் போட்டு கதை எழுதி கொண்டிருப்பேன், அல்லது கதை படித்து கொண்டிருப்பேன், என்னுடன் படித்தவர்களை கேட்டால் அதிகம் தூங்கியதைத்தான் சொல்வார்கள். அப்படி எழுதிய கதைகளை தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்களை தேடிப் பிடித்து கட்டாயப் படுத்தி படிக்க வைத்து கருத்து கேட்பேன். அதன் மூலமாக எனக்கு பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். முதன் முதலில் நான் எழுதிய கதை "சாரல் காலம்". முழுக்க முழுக்க காதலும் கிண்டலும் மட்டும் போட்டி போட்டு மோதும் கல்லூரிக்காலம், தனியாக எதையும் கற்பனை செய்யாமல் என் உயிர் நண்பர்கள், நாங்கள் வழக்கமாக செய்யும் விசயங்களை தொகுத்து எழுதப்பட்ட கதை. எனக்கு டைரி எழுதும் பழக்கம் உடையதால், இக்கதையை படித்த பல கல்லூரி நண்பர்கள் "உண்மையை சொல்றா, இதுல வர்ர எல்லா கேரக்டரும் நம்ம காலேஜ்ல இருக்காங்க, இது நடந்தது தானே?"னு கேட்டதுண்டு. அதற்கு எனது பதில் உண்மையில் நடந்திருந்தால் இப்பட

கேடி பில்லா கில்லாடி ரங்கா - விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், நேரடியாக படத்திற்குள் செல்வோம், தமிழில் எனக்கு மிகவும் பிடித்த படங்களின் வரிசையில் "பசங்க" படத்திற்கு என்றும் இடமுண்டு, அதன் இயக்குனரின் படைப்பான படத்திற்கு யாருடைய விமர்சனத்தையும் கேட்காமல் போக வேண்டும் என்று நேற்று சென்றேன். மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு நான் கொடுத்த 50 ரூபாய்க்கு இது போதும் என்றுதான் தோன்றியது, ஏனேன்றால் அதே தியேட்டரில்தான் 'அலெக்ஸ் பாண்டியன்' பார்த்தேன்.    படத்தில் கதைலாம் இருக்கானு கேட்க கூடாது, ஆரம்பமே அலப்பறைய குடுக்கறாங்க, புது வருசத்துக்கு முன்னாடி நாள் குடிய இத்தோட விடறோம்னு சபதம் எடுத்துகிட்டு குடிக்க ஆரம்பிக்கறப்ப தியேட்டர் முழுக்க விசில், அத்தனை குடிகாரங்களை அரசாங்கம் உருவாக்கி வச்சுருக்கு. மத்த படம் மாதிரி இல்லாம பட ஹீரோனு வர்ர 2 பேருக்கும் கவுன்சிலர் ஆகனும்னாவது லட்சியம் இருக்கேனு சந்தோச பட்டுக்க வேண்டியதுதான். தன்னை பார்த்து கண்ணடிக்கற பொன்னுகிட்ட " நீயெல்லாம் அண்ணன் தம்பி கூட பிறக்கலை?" னு கேட்கறதுல ஆரம்பிச்சு படம் முழுக்க சிவாவோட டைமிங் காமெடிதான் படத்தை காப்பாத்துது.  

ஹரிதாஸ் - பாராட்டப்பட வேண்டிய முயற்சி

Image
அன்பர்களுக்கு வணக்கம், முன்பு போல் நிறைய எழுத நேரமும் மனமும் இருப்பதில்லை, இன்று தான் இப்படத்தினை பார்த்தேன், படம் வருவதற்கு முன்பாகவே கேபிள் சங்கர் அவர்கள் தனது வலைத்தளத்தில் இப்படத்தினை குறிப்பிட்டு கட்டாயம் பார்க்க வேண்டிய படமென்று சொல்லி இருந்தார், நானும் என் நண்பர்களிடம் இப்படத்தினை பற்றி கூறி இருந்தேன், சரி படத்தினுள் செல்வோம். முதலில் ஆட்டிசம் பற்றி தெரிந்து கொள்வோம், அது ஒரு வகையான குறைப்பாடாக தெரியும் திறமை, இதனை உடையவர்கள் சராசரி சமூகத்தினை பார்ப்பவர்கள் அல்ல, அவர்களுக்கென்று ஒரு உலகத்தினை உருவாக்கி அதனுள்ளே வாழ்பவர்கள், உதாரணத்திற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டின், பள்ளி படிப்பிற்கு தகுதியற்றவர் என்று வீட்டிற்கு அனுப்ப பட்டவர், அவரது தியரி இல்லாமல் இப்போதைய இயற்பியல் இல்லை. எனக்கு ஒரு தோழி , ஆட்டிசம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை கொடுப்பதற்கான படிப்பை( Rehabilitation science ) படித்தவள், அவளிடம் பேசும் போது நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன், நாம் ஒவ்வொருவரும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தான், சிலர் புத்தகத்திற்குள்ளும், சிலர் கிரிக்கெட்டிலும், சிலர் சினிமாக்களிலும் தங்கள் உல