Posts

Showing posts from May, 2013

தனித்திரு - 9

Image
முந்தைய பாகங்கள் #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 -------------------------------------------------------------------------------------------------------------- அடுத்த நாள் கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி ஒன்றாக வருகையில் என்னால் திருவை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை. அவன் என்னுள் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து ‘என் ஒரு மாதிரி இருக்க?' எனக் கேட்டான். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எனக்கு ஒரு விஷயம் தெளிவாய் புரிந்தது. இதற்கு மேல் என்னால் முன்பு போல் திருவிடம் இயல்பாய் பேச முடியாது. காதலை சொல்லியே ஆக வேண்டும். “திரு” “சொல்லு” “சொன்னா கோவிச்சுக்க கூடாது?” “சொல்லு” “நான் உன்னை காதலிக்கறேன்” அவன் நிமிர்ந்து என் முகத்தை பார்த்தான். அந்த பார்வையில் அவன் என்னிடம் இதை எதிர்பார்க்கவில்லை என தெரிந்தது. “என்ன திடிர்னு?” “நேத்துதான் எனக்கே தெரிஞ்சது” “நான் என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கற வரலட்சுமி?” “உனக்கு என்ன தோணுது?” “நான் எதாவது சொன்னா உன் மனசு கஷ்டபடுமோனு பயப்படறேன்” “பரவாயில்லை சொல்லு” “எனக்கு உ

தனித்திரு - 8

Image
முந்தைய பாகங்கள் #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 -------------------------------------------------------------------------------------------------------------- அதன் பின்னர் திருவுடன் எப்போது பேசினாலும் எதாவது ஒரு விஷயத்தை பற்றி புதிதாய் பேசி, அவன் அதை எப்படி பார்க்கிறான் என்பதை பார்க்க துவங்கினேன். நாட்கள் நகர்ந்தது. ஒரு மாதம் கழித்து என் அத்தை மகளின் திருமணத்திற்கு செல்ல பேருந்து நிலையத்தில் என் குடும்பத்துடன் காத்திருந்தேன். ஏதெச்சையாக திருவுடன் ஒரு பெண் பேசிக்கொண்டு வருவதைப் பார்த்தேன். ஒரு நிமிடம் உள்ளே ஏதோ எழுந்து அணைந்தது. நான் பார்த்ததை கவனித்து சுபாவும் அவர்களை பார்த்தாள். இருவரும் எங்களை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தனர். திரு எங்களை பார்த்ததும் புன்னகைத்தான். அதில் எந்த களங்கமும் இல்லை. என் அப்பாவிற்கு அவனை பார்த்ததும் மிகவும் சந்தோஷம், உற்சாகமாக அவனுடன் கைகுலுக்கி நலம் விசாரித்து கொண்டிருந்தார். திரு எங்களுக்கு அவனுடன் வந்திருந்த பெண்ணை அறிமுகபடுத்தினான். பெயர் தீபிகாவாம். அவனுடன் பள்ளியில் படித்தவளாம். எனக்கு அவளை பார்க்க எர

தனித்திரு - 7

Image
முந்தைய பாகங்கள் #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 -------------------------------------------------------------------------------------------------------------- அடுத்த நாள் நானே எதிர்பாராத விதமாய் வீடு வந்து சேர்ந்ததும் திருவிடமிருந்து அழைப்பு வந்தது. நம்ப முடியாமல் பேசினேன். நான் எதிர்பார்த்தது போல் எதுவும் இல்லை. அவன் தங்கைக்கு ஏதோ சில துணிகள், அலங்கார பொருட்கள் வாங்க துணைக்கு போய் வர முடியுமா என்று கேட்டான். எனக்கும் அந்த முட்டை கண்ணியை மீண்டும் பார்க்க வேண்டும் போல இருந்ததால் சரி என்று ஒத்துக்கொண்டேன். நான் உடை மாற்றி தயாராவதற்குள் வீட்டிற்கு அழைத்து வந்து, என் வீட்டில் உள்ளோரிடம் பேசிவிட்டு சென்றான். அவன் தங்கையின் பள்ளியில் ஏதோ விழா நடக்க போகிறதாம். அதற்கு நடனமாட போகிறார்களாம். 4 பெண்களுக்கு ஒரே மாதிரி துணி எடுக்க வேண்டும் என்றும் மற்ற சில அலங்கார பொருட்கள் வாங்க வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன். எனக்கும் இது போன்ற பொருட்களை எங்கு வாங்க வேண்டும் என்று அவ்வளவுக்காய் தெரியாது, என் தோழிகளிடம் விசாரித்து அழைத்து சென்றேன். கடைகளுக்கு சென்ற

தனித்திரு - 6

Image
முந்தைய பாகங்கள் #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 -------------------------------------------------------------------------------------------------------------- திருமுருகனுக்கு திருப்பி தர வேண்டும் என்பதற்காகவே வேகவேகமாக எழுதி முடித்தேன். எழுதி முடித்த பின்பு அவன் வீட்டை பற்றி சிந்தித்து பார்த்தேன். எனக்கு ஒரு பக்கம் அந்த வீட்டை பிடித்திருந்தது. எங்கள் வீட்டிற்கு யாரேனும் வந்தால் நாங்கள் அவர்கள் செல்லும் வரை அறையை விட்டு வெளியே வரவே மாட்டோம். எங்களை பார்த்தபின் அவன் தங்கை அவனருகே அமர்ந்த விதம் எனக்கு பிடித்திருந்தது. அந்த வீட்டில் இருப்பவர்களுடன் இன்னும் நெருக்கமாக பழக வேண்டுமென்ற ஆவல் பிறந்தது. எழுதி முடித்தாகி விட்டது. வாங்கிய நோட்டினை திருப்பி தர வேண்டும். ஆனால் அக்கா வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந்தாள். அவள் வந்தால் உடனே கிளம்பலாம் என்று காத்திருந்தேன். கொஞ்சம் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தாள். உடனே திரு வீட்டிற்கு செல்ல வேண்டும் என தயாராக சொல்லி அவளை கிளப்பினேன். ஆனால் அதற்குள் வாசலில் நிழலாடியது. நான் கண்ணாடி முன் நின்றிருந்த

தனித்திரு - 5

Image
முந்தைய பாகங்கள் #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 -------------------------------------------------------------------------------------------------------------- இன்று பேருந்தில் இருந்து இறங்கியதும் திருவை திரும்பி கூட பார்க்காமல் வேகமாக வீடு நோக்கி வந்தேன். அக்கா வந்ததும் நடந்தது அனைத்தும் கூறினேன். அவள் கூறியது “உன் கூட பழகற யாருக்கும் கொஞ்சம் கூட பக்குவம் இல்லை. ஒரு பையனும் பொண்ணும் பேசுனா கொஞ்ச நாள்-ல காதலிச்சுடுவாங்கனு சினிமாவ பார்த்து நம்பிகிட்டு இருக்காங்க. அவங்க தனியா ஒரு பையன் கூட பேச ஆரம்பிச்சா கொஞ்ச நாள்-ல காதலிச்சுடுவாங்க. ஆனா இனிமேல் அவங்ககிட்ட மத்த பசங்களை குறிப்பிட்டு பேசாத. இந்த வயசுல நாம எதை பத்தி பேசுனாலும் அது காதலுக்கு அறிகுறினு சொல்லி நம்மளை அதுக்குள்ள தள்ளிவிடத்தான் எல்லாரும் பார்ப்பாங்க. அதே மாதிரி அந்த திரு நல்லவனா, கெட்டவனானு தெரியாம பழகறது தப்பு, அதுலயும் அவனை பத்தி தெரிஞ்ச நண்பன்னு யாரும் இல்லாதப்ப அவனை தவிர்க்கறதுதான் நல்லதுன்னு எனக்கு படுது” அக்காவிடம் பேசியபின் யோசித்து பார்த்ததில் எனக்கும் அதுதான் சரியென பட்