Posts

Showing posts from July, 2013

பட்டத்து யானை - யானை பேர் சந்தானம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், கோவை வந்ததுல இருந்த நினைச்ச மாதிரி படம் ரிலிஸ் ஆனா முதல் நாளே பார்க்க முடியுது, இன்னைக்கு "சொன்னா புரியாது" போகனும்னு நினைச்சாலும் பக்கத்துல அது ரிலிஸ் ஆகததால பட்டத்து யானைய பார்க்க போனோம், காலையில சகப்பதிவர்கள் போட்ட விமர்சனத்துல சுமார்னு சொல்லிருந்தாலும் மரியான் அளவுக்கா இருந்துட போகுதுனு போனோம், ஏன்னா நாங்க அலெக்ஸ் பாண்டியனையே முதல் நாள் பார்த்தவங்க...   படத்துல கதை இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை, ஏன்னா டைரக்டர் பூபதி பாண்டியன், ஆனா நச்சுனு காமெடி இருக்கும்னு எதிர்பார்த்தேன், ஏன்னா அவரோட முதல் படத்துல இருந்து படம் எவ்ளோ மொக்கையா இருந்தாலும் சில காமெடிகள் பயங்கரமா ரசிக்க வைக்கும், உதாரணத்துக்கு "மலைக்கோட்டை"ல "இடிமுட்டி" கேரக்டர், "காதல் சொல்ல வந்தேன்"ல பேக்ரவுன்ட் கஜினி மியுசிக் குடுத்து பில்டப் ஏத்தற லேடி வாய்ஸ் கேரக்டர்னு சொல்லலாம். எதிர்பார்த்த மாதிரி வயிறு வலிக்கற அளவுக்கு காமெடி இல்லைனாலும் படத்தோட மொக்கைகள் தெரியாத அளவுக்கு காமெடி இருக்கு, அதுக்கு காரணம் சந்தானம் தான், அவர் யாரோட பாடி லாங்க்வேஜ

மரியான் - அவசர பட்டுட்டேன்

Image
தனுஷ்க்குனு ஒரு அடையாளம் வந்துருச்சு, அவருக்கு போட்டினுலாம் இனி யாரும் நிக்க முடியாத இடத்துக்கு போய்ட்டார், "மரியான்"படத்தை உண்மையிலேயே தனுஷ் அ நம்பித்தான் முதல் நாள் பார்க்கப்போனேன், படம் கமர்ஷியல் இல்லைனு தெரியும், அதுக்காக இவ்ளோ மெதுவா போனா எப்படி? ஆடியன்ஸ் ஒவ்வொருத்தரும் வாட்ச் அ பார்த்துகிட்டே படம் பார்க்கறாங்க...   கதைக்களம் புதுசுனு சொல்ல முடியாது, நீர்ப்பறவைல பார்த்தது, அப்புறம் கொஞ்சம் மயக்கம் என்ன, செகன்ட் ஆஃப் "ரோஜா", இன்னும் கொஞ்சம் யோசிச்சுருக்கலாம், ஆனா ஒருவேளை உண்மைக்கதைங்கறதால எதுவும் செய்ய முடியலையோ என்னவோ? அதுக்குனு படம் மொக்கைனு சொல்ல மாட்டேன், ஏன்னா படத்தை 2 பேர் தூக்கி நிறுத்துறாங்க, படத்தோட ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், அவங்க இல்லைன்னா பல பேர் எழுந்து ஓடிருப்பாங்க, ஒவ்வொரு ஃப்ரேமும் தமிழுக்கு புதுசு, ஆப்பிரிக்கா புதுசு, முக்கியமா பார்வதி மேனன் ஃப்ரெஷ் ஆ இருக்க புதுசு. படத்துல தனுஷ் அ உபயோகப்படுத்துன அளவுக்கு மத்த எல்லோரையும் கண்டுக்காம விட்டது வருத்தப்படத்தக்க விஷயம், அதுலயும் அந்த மலையாள நடிகர் சலிம்

மகாதேவன் - கரை சேர்ப்பாளன்

Image
அன்பர்களுக்கு வணக்கம், நேற்று எங்கள் கல்லூரியில் புதிதாய் வந்திருக்கும் பேராசிரியர்களுக்கென ஒரு சுய உந்து நிகழ்ச்சி நடத்தினர், அதில் கோவை பார்க் கல்லூரி முதல்வர் திரு.லக்ஷ்மன் அவர்கள் ஒரு மனிதனை பற்றி மேலோட்டமாக குறிப்பிட்டார், பெயர் கூட கூறவில்லை, செய்யும் வேலையை மற்றவர்கள் மேற்பார்வை செய்கிறார்கள் என்பதற்காக செய்யாமல் தானாக சுயதிருப்திக்காக செவ்வனே செய்பவர்களுக்கு உதாரணமாய் அவரை குறிப்பிட்டார், அந்த மனிதனை பற்றிய விஷயங்கள் என்னை வெகுவாய் பாதித்தது. நமக்குதான் இருக்கவே இருக்கிறதே இணையம், தேடிப் பிடித்தேன், முழுதாய் அறிந்து கொண்டேன். அந்த மனிதனின் பெயர் மகாதேவன். அவரை பற்றிய தகவல்கள் உங்களுக்காக...   பிறந்தது 1961 ஆம் வருடம், கர்நாடகா மைசூரில் அஞ்சுப்புரா என்ற கிராமத்தில் பிறந்த மகாதேவ் தனது 8வது வயதில் பெங்களூர் அரசு மருத்துவமனைக்கு தனது உடல்நலமில்லாத தாயுடன் வந்தார், அவரது தந்தையை பற்றிய தகவல் இல்லை, அரசு மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் மருத்துவமனை வரான்டாவில் தன் தாயை படுக்க வைத்து விட்டு, அக்கம் பக்கமிருந்தவர்களிடமும் சுற்றி இருந்த கடைகளிலும் பசிக்கு தஞ்சமடைந்துருக்க