Posts

Showing posts from March, 2015

ஒரு கைதியின் டைரி

எனக்கு தெரிந்து யாரிடமும் இந்த பழக்கம் இல்லை, யாரை பார்த்து ஆவல் கொண்டேன் என்றும் தெரியவில்லை, எட்டாம் வகுப்பில் இருந்தே எனக்கு டைரி எழுதும் ஆவல் இருந்தது. ஒன்பதாவது படிக்கையில் என் தந்தைக்கு LICல் கொடுத்த டைரியை வைத்து நான்கு நாட்கள் எழுதி இருப்பேன், படிக்காமல் காதல் கவிதை எழுதுகிறான் என புகார் போனது. நான் அதற்கென தனியாக ஒரு குயர் நோட்டு வாங்கி வைத்து எழுதி கொண்டிருப்பது வீட்டிற்கு தெரியாது, ஆனால் பாவம் கவிதை நோட்டை காப்பாற்றுவதற்கு வேறு வழி தெரியாமல் டைரியை அப்பாவிடம் பழி கொடுத்தேன், அவர் அதை எரித்து விட்டு படிப்பை கவனிக்க சொன்னார், நான் நல்ல பிள்ளையாக கவிதைகளில் பயிற்சி எடுத்து கொண்டிருந்தேன்… பின்னர் 2005ம் வருடம் கல்லூரி விடுதியில் நிறைய நேரமும் தனிமையும் கிடைக்க முழுமையாய் டைரி எழுத துவங்கினேன். அதுவும் ஆங்கிலத்தில். ஏனேனில் நான் +2 வரை தமிழ்வழிக்கல்வியில் பயின்றவன். பொறியியல் படிப்பினை ஆங்கிலத்தில் எதிர்கொள்ள சிரம்ப்பட்டேன். டைரியை ஆங்கிலத்தில் எழுத முயற்சித்தால் நண்பர்கள் உதவியுடன் அம்மொழியினில் தேறலாம் என முயன்றேன், நல்ல பலனும் கிடைத்து. அடுத்த வருடம் முதல்

மாமனாரிடம் ஒரு கேள்வி

அந்த கேள்வியை ஒரு தடவை பேச்சு வாக்குல கேட்டதுக்கே 4 நாளா பல பேர்கிட்ட கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்தார், மறுபடியும் கேட்டா அவர் என்னை டைவர்ஸ் பண்ணிருவார்னு நினைக்கிறேன்  http://www.thoovaanam.com/?p=844

இந்தியன் என்றால் காமுகனாம்

நம் நாட்டிலுள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் அவர்களுடைய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளில் இருக்கும் பல்கலைகழகங்களுக்கு செல்வது வழக்கம். அதற்கு அவர்கள் அங்கு பணிபுரியும் பேராசிரியரிடம் முதலில் விண்ணப்பித்து, அவர்களின் கீழ்தான் சென்று கற்கவோ ஆராயவோ இயலும். சமீபத்தில் ஜெர்மனியின் லெய்ப்ஜிக் பல்கலைக்கழக பேராசிரியை பெக்சிங்கரிடம் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற இந்திய மாணவர் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். அதை நிராகரிப்பதற்கு அவர் கூறிய காராணம் என்ன தெரியுமா? இந்தியாவில் பலாத்காரங்கள் அதிகம் நடப்பதால், இந்திய மாணவருக்கு பயிற்சி அளிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். மேலும் படிக்க ...

எனக்குள் ஒருவன்

Image
சின்ன வயசுல சினிமா புரிஞ்ச காலத்துல எல்லோருடைய மனதிலும் நடிகனாக வேண்டும் என்ற அசை துளிர் விடும், பிடித்த நடிகர்கள் பேசிய வசனங்களை மனனம் செய்து கண்ணாடி முன் நடத்து பார்க்காமல் யாரும் வந்திருக்க இயலாது,  சரி எல்லோரும் ஆசைப்படும் அந்த உச்சம் பெற்ற நடிகர் மனது எதற்கு ஆசைப்படும்? இந்த கேளவிதான் படத்தின் கதைக்கரு. கன்னடத்தில் எடுக்கப்பட்டு மெகாஹிட்டான லூசியா படத்தின் தமிழ் பதிப்புதான் இந்த எனக்குள் ஒருவன், படத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள க்ளிக் செய்யவும்